சினிமா

மார்ச்சில் வெளியாகிறது பிரபு சாலமனின் ‘காடன்’

sharpana

பிரபு சாலமனின் ‘காடன்’ திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ’தொடரி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும் படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். மேலும், விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்குக்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.

ராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில், சாண்டோ சின்னப்பா தேவர், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. அவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. 

இந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பிரபு சாலமன் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இந்தியாவில் பல மாநிலக் காடுகளில் படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக, ராணா சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்திருந்தார். இந்நிலையில், ‘காடன்’ படம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.