வணிகம்

கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்

Rasus

பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்து 36,562-ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 10,797-ல் வணிகம் நிறைவு பெற்றது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவை விட குறைந்துள்ள நிலையில் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.