வணிகம்

நிறுவனம் மாறினாலும் இனி பிஎஃப் கணக்கு மாறாது

நிறுவனம் மாறினாலும் இனி பிஎஃப் கணக்கு மாறாது

webteam

தொழிலாளர்கள் எத்தனை நிறுவனத்திற்கு மாறினாலும் ஒரே பி.எஃப் கணக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தங்கள் பணியை மாற்றிக்கொண்டாலும், அவர்களின் பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கும் தானாகவே அந்த நிறுவனத்திற்கு மாறிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஜாய் தெரிவித்தார். 

இந்த சேவை அடுத்த மாதத்திலிருந்து அமலுக்கு வரும் எனவும் ஜாய் தெரிவித்தார். தொழிலாளர்கள் வேறு நிறுவனத்‌திற்கு பணி மாற்றம் ஆகும்போது அவர்களுடைய பிஎஃப் கணக்குகளை அப்படியே விட்டுச்செல்வது அல்லது கணக்கை முன்னரே முடித்துக்கொள்வது உள்ளிட்டவை பிரச்னையாக இருக்கிறது.