வணிகம்

குறைந்த இருப்பு தொகை: ரூ.235 கோடி அபராதம் வசூலித்த எஸ்பிஐ

குறைந்த இருப்பு தொகை: ரூ.235 கோடி அபராதம் வசூலித்த எஸ்பிஐ

webteam

வங்கிக் கணக்கில் குறைந்த இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டும் 235 கோடி ரூபாய் வரை பாரத ஸ்டேட் வங்கி அபராதம் வசூலித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுட் என்பவர் கேட்ட கேள்விக்கு, மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் ‌வங்கி இந்த தகவலை அளித்துள்ளது. அதன்படி ஜூன் 30ஆம் தேதி வரை முதல் காலாண்டு வரை பாரத ஸ்டேட் வங்கி 388 கோடி வங்கி கணக்குகளில் குறைந்த இருப்பு தொகை வைத்திருந்ததாக 235 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.