வணிகம்

ஜியோவின் அதிரடியான பிரிபெய்ட் திட்டம்!

webteam

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று விதமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

டெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப, தற்போது பிரிபெய்ட் பிளானில், ’ஜியோ சாச்செட் பேக்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ரூ.19, ரூ.52, ரூ.98 ஆகிய விலைகளில் மூன்று திட்டங்கள் இருக்கின்றன. 19 ரூபாயில் தொடங்கும் இந்த பிளான்கள் ரூ. 9999 வரையுள்ளது. குறைந்த நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டேட்டா வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.19 ரீசார்ஜ் ப்ளான்:

ஒரு நாள் மட்டுமே செயல்படும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், 4ஜி வேகத்தில் நாள் ஒன்றுக்கு 0.15ஜிபி டேட்டாவை உபயோகிக்கலாம். இதனுடன் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் வாய்ஸ் கால்ஸை பயன்படுத்தலாம். 20 குறுங்செய்திகளை அனுப்பிக் கொள்ள முடியும். 

ரூ.52 ரீசார்ஜ் ப்ளான்:

ஏழு நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், மொத்தம் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதனுடன் அளவில்லாத லோக்கல், ரோமிங், வாய்ஸ் கால்ஸ் மற்றும் 70 இலவச குறுங்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ. 98 ரீசார்ஜ் ப்ளான்:

14 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், மொத்தம் 2.1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் 140 இலவச குறுங்செய்திகள், அளவில்லாத லோக்கல், ரோமிங் வாய்ஸ் கால்ஸை பயன்படுத்தலாம். 

ஜியோவின் இந்த அதிரடியான பிரிப்பெய்ட் திட்டத்துடன், 50 ரூபாய் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.