வணிகம்

தடுப்பூசி அறிவிப்பு எதிரொலி - ஏற்றத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள்

தடுப்பூசி அறிவிப்பு எதிரொலி - ஏற்றத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள்

Sinekadhara

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 457 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.