வணிகம்

பிப்.20 முதல் சேமிப்புக் கணக்கில் வாரம் ரூ.50,000 எடுக்கலாம்..!

பிப்.20 முதல் சேமிப்புக் கணக்கில் வாரம் ரூ.50,000 எடுக்கலாம்..!

Rasus

வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து பிப்ரவரி 20-ம் தேதி முதல் வாரம் 50,000 ரூபாய் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டால் வங்கி, ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

தற்போது பணத் தட்டுப்பாடு பிரச்னை நாளுக்கு நாள் மெல்ல மெல்ல சீராகி வரும் நிலையில் வங்கிக் சேமிப்புக் கணக்கில் இருந்து பிப்ரவரி 20-ஆம் தேதி முதல், வாரம் 50,000 ரூபாய் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வரை வாரம் ரூ.24,000 வரை மட்டுமே வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்க முடியும். மார்ச் 13-ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்கில் எந்த கட்டுப்பாடுமின்றி பணம் எடுக்கலாம் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.