வணிகம்

சென்னை: மீண்டும் ரூ.40 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை

Veeramani

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்துள்ளது

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்து, 5 ஆயிரத்து 5 ரூபாயாக இருக்கிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 72 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 40 ரூபாயாக உள்ளது. இதுபோல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 40 காசாக உள்ளது.



கடந்த சில மாதங்களாகவே உயராமல் இருந்த தங்கத்தின் விலை உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் எதிரொலியாக கடந்த மாதம் கடுமையாக அதிகரித்தது. இதனால் கடந்த மார்ச் 8 ஆம் தேதி சவரனுக்கு 40 ஆயிரத்து 840 ரூபாய் என்ற அளவுக்கு விலை உயர்ந்த நிலையில், பின்னர் விலையானது படிப்படியாக குறைந்து சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.