கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!

துருக்கி அதிபர் சிறுவன் ஒருவன், தன் கையில் முத்தம் தரவில்லை என்பதற்காக அவனது கன்னத்தில் அறைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி அதிபர்
துருக்கி அதிபர்எக்ஸ் தளம்
Published on

துருக்கி அதிபராக ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர், கடந்த ஜூலை 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது, மேடையேறி வந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர், அதிபரின் கையில் முத்தமிடாமல் சென்றுள்ளார். துருக்கிய கலாசாரத்தில் கைகளில் முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது.

பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் கைகளை முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனையடுத்து, அந்தச் சிறுவனின் கன்னத்தில் அதிபர் மெதுவாக அறைவதுபோல தட்டுகிறார். பின்னர், அந்தச் சிறுவன் அதிபரின் கையில் முத்தமிட்டுவிட்டு, பரிசுப்பொருளும் பெற்று செல்கிறார்.

இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிபரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், “இது ஒரு சாதாரண விஷயம்தான்” என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் ``மேடையிலேயே ஒரு சிறுவனின் கன்னத்தில் அதிபர் அறைகிறார் என்றால், திரைக்குப் பின்னே என்னவெல்லாம் நடக்குமோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், ”அதிபரின் இந்தச் செயல் அருவெறுக்கத்தக்கதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘பாஸ்போர்ட், விசா வேண்டாம்; இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைவது எப்படி?’ யூடியூபரின் சர்ச்சை வீடியோ!

துருக்கி அதிபர்
ஸ்வாதி மாலிவால் தாக்குதல்|FIRல் 8 முறை கன்னத்தில் அறை.. தலைமறைவான PA.. வலைவீசும் போலீஸ்!

அதேநேரத்தில், சில பயனர்கள் அதிபரின் செயலை ஆதரித்து கருத்து பதிவிட்டுள்ளனர். துருக்கிய கலாச்சாரத்தில் கைகளில் முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாகக் கூறும் அவர்கள், துருக்கியில். அவ்வாறு செய்யாவிட்டால், “இளம்வயதிலேயே அதை செய்ய திருத்தப்படுகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விவகாரம் துருக்கி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அதிபர் எர்டோகன் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் எர்டோகன் குடும்பத்தின் அண்டை வீட்டாரைப் பார்வையிட சென்றபோது, துருக்கி தேசிய அணி டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் கேட்ட ஒரு குழந்தையை, எர்டோகன் அறைந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டில், சலர்கா சுரங்கப்பாதை திறக்கப்பட்டபோது, ஒரு சிறுவனின் தலையை எர்டோகன் தட்டினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல், கடந்தாண்டு, எர்டோகன் தனது பேரனை அறைந்ததாகவும் கூறப்பட்டது; இருப்பினும், அந்த கருத்தினை மறுத்த எர்டோகன், தனது பேரனின் தலையில் தடவிக் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: மினிமம் பேலன்ஸ் இல்லை... 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல்.. ராகுல் காந்தி கண்டனம்!

துருக்கி அதிபர்
கன்னத்தில் அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள்.. சாடிய கங்கனா ரனாவத்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com