காஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..!

காஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..!
காஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..!
Published on

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மறுசீராய்வு மசோதா கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சீனாவும், எல்லை பிரச்னையில் இந்தியா ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை மீற கூடாது என எச்சரிக்கை விடுத்தது. 

அத்துடன் பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது. அதேசமயம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் மூடப்பட்ட அறையில் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வைத்தது. இதனை ஏற்ற பாதுகாப்பு கவுன்சில், இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளது. இன்று நடைபெற இருக்கும் கூட்டம் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை கூட்டமே ஆகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com