இன்றைய காலை தலைப்புச் செய்திகள்| 2வது நாளாக முடங்கிய மைக்ரோசாஃப்ட் To ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 2வது நாளாக முடங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதல் மன்னிப்பு கோரியது Crowdstrike நிறுவனம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்PT
Published on
  • மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் 2வது நாளாக முடங்கிய தொழில்நுட்ப சேவைகளால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  • மைக்ரோசாஃப்ட் முடங்கியதால் உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், திட்டமிட்ட பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏராளமானோர் பாதிப்படடைந்துள்ளனர்.

  • உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னைக்கு மன்னிப்பு கோரியது Crowdstrike நிறுவனம்.இந்நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண தீவிரமாக பணியாற்றி வருவதாக மைக்ரோசாப்ட் விளக்கமளித்துள்ளது.

  • ஆளுநர் ஆர்.என்.ரவிவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு. இந்நிலையில், தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை என தகவல்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

  • கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொடூர கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

  • கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

  • தொடர் கனமழையால் திரும்பும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கர்நாடகா. தக்ஷின கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.

  • வங்கதேச நாட்டில் நாடு தழுவிய ஊரடங்கு அமல் மாணவர் போராட்டங்கள், வன்முறைகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • தமிழகத்தை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது அளித்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பு கவுரவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com