புலம்பெயர்ந்த ரோஹிங்ய மக்களுக்கு உதவிட ஐநா கோரிக்கை

புலம்பெயர்ந்த ரோஹிங்ய மக்களுக்கு உதவிட ஐநா கோரிக்கை
புலம்பெயர்ந்த ரோஹிங்ய மக்களுக்கு உதவிட ஐநா கோரிக்கை
Published on

மியான்மரில் இருந்து சுமார் 40 சதவீத ரோஹிங்ய இன முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ராகினே மாகாணத்தில் காவல்துறையின் சோதனை சாவடிகளை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரோஹிங்ய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியது முதல் அங்கு தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. கிராமங்களில் உள்ள வீடுகளை ராணுவத்தினர் தீ வைத்து கொளுத்தியதால், உயிருக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்ய முஸ்லிம்கள் வங்கதேச எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர். உணவு, குடிநீர் உள்பட‌ அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் ரோஹிங்ய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என ஐ.நா தற்போது வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் துஜாரிக், வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார பொருட்கள் யூனிசெப் மூல‌ம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com