பிறந்ததும் மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் பச்சிளம் குழந்தை - வைரலாகும் நெகிழ்ச்சி போட்டோ!

பிறந்ததும் மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் பச்சிளம் குழந்தை - வைரலாகும் நெகிழ்ச்சி போட்டோ!

பிறந்ததும் மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் பச்சிளம் குழந்தை - வைரலாகும் நெகிழ்ச்சி போட்டோ!
Published on

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலினால் உலகம் முழுவதுமே மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்த ‘மாஸ்க் மேன்களாக’ பொது இடங்களில் நடமாடுகின்றனர்.

பல்வேறு நாடுகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயில் இந்த பேரிடர் காலத்தில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டியெறிய முயன்றுள்ளது.

அந்த படத்தை துபாயை சேர்ந்த மகளீர் சிறப்பு மருத்துவ நிபுணரான மருத்துவர் சமர் செயிப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதோடு “நாம் எல்லோரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சமிஞை கிடைத்துள்ளது” என கேப்ஷனும் போட்டுள்ளார்.

தற்போது அந்தப்படம் உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நாங்களும் அதற்காக தான் காத்திருக்கிறோம் குழந்தாய் என சொல்லி பலநெட்டிசன்கள் பலர் அதற்கு லைக்ஸும், கமெண்ட்ஸும் போட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com