கனடாவில் அவசர நிலை பிரகடனம்: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

கனடாவில் அவசர நிலை பிரகடனம்: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
கனடாவில் அவசர நிலை பிரகடனம்: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
Published on

கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிடும் வகையில் அவசரகால உதவி எண்ணை அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுவடைந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களை தவிர்க்கவும், ஊரடங்கு உத்தரவுகளை பின்பற்றவும், உள்ளூர் ஊடகங்கள் மூலம் அங்குள்ள சூழலை அறிந்து கொள்ளவும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: ரஷ்யாவுடன் போர் பதற்றம் - துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெறும் உக்ரைன் நாட்டு பொதுமக்கள்


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com