30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட சமோசா - சவுதி அரேபியாவில் ஓர் அதிர்ச்சி

30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட சமோசா - சவுதி அரேபியாவில் ஓர் அதிர்ச்சி

30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட சமோசா - சவுதி அரேபியாவில் ஓர் அதிர்ச்சி
Published on

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா மற்றும் இதர உணவுப் பொருட்களை தயாரித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறைகளில் சமோசா மற்றும் பிற தின்பண்டங்களை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியதை ஜித்தா நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கிருந்த உணவுப் பொருட்களில் சில இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையவை. மேலும் அந்த இடத்தில் பூச்சிகள் மற்றும் எலிகளும் காணப்பட்டன.

30 ஆண்டுகளாக அந்த உணவகம் மோசமாக செயல்படுவதாக கூறப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் உணவகத்தில் சோதனை நடத்தினர். உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் சுகாதார அட்டை இல்லை என்றும், குடியுரிமைச் சட்டத்தை மீறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அந்த உணவகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் சுகாதாரமற்ற சூழ்நிலைக்காக உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல. ஜெட்டாவில் உள்ள ஒரு ஷவர்மா உணவகத்தில் ஷவர்மா குவியலின் மீது எலி காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டது. ஷவர்மா குவியலில் எலி இறைச்சியை உண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது, அங்கு பல பயனர்கள் உணவகத்தின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் 2,833 ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் விளைவாக 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 26 உணவகங்கள் மூடப்பட்டதாக நகராட்சி தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com