செல்பி மோகத்தால் பலியான சிறுமி...

செல்பி மோகத்தால் பலியான சிறுமி...
செல்பி மோகத்தால் பலியான சிறுமி...
Published on

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற சிறுமி பரிதாபமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரிதாபாத் கானெவால் ரெயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் ஓடும் ரயில்பின்புறம் தெரிகிற தோற்றத்தில் செல்பி எடுக்க முயன்று செல்போனுடன் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தாள். அப்போது கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. செல்பி மோகத்தில் இருந்த சிறுமி ரயில் வருவதை கவனிக்கக்காமல் நின்று கொண்டிருந்தாள். வேகமாக வந்த ரெயில் சிறுமி மீது மோதியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று, கடந்த மாதம் கோயம்புத்தூரில் பொறியியல் மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்று ரயில் விபத்தில் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com