அமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு

அமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு
Published on

அமெரிக்காவில், வாஷிங்டன் டி.சி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். வெள்ளை மாளிகை அருகே நடந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடம் வெள்ளை மாளிகை அருகில் என்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com