மெக்சிகோவில் பலூன் திருவிழா: வானை வண்ண மயமாக்கிய பிரமாண்ட பலூன்கள்

மெக்சிகோவில் பலூன் திருவிழா: வானை வண்ண மயமாக்கிய பிரமாண்ட பலூன்கள்
மெக்சிகோவில் பலூன் திருவிழா: வானை வண்ண மயமாக்கிய பிரமாண்ட பலூன்கள்
Published on
மெக்சிகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண பலூன்கள் வானில் பறந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தலைநகர் நியூ மெக்சிகோவில் வருடாந்திர பலூன் திருவிழா விமரிசையாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக கடந்தாண்டு இவ்விழா நடக்காத நிலையில் இந்தாண்டு அதை ஏராளமானோர் கண்டுகளித்தனர். வெப்பக்காற்று நிரப்பப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்ட பலூன்கள் வானை அலங்களித்தன. 588 பலூன்கள சுமார் 9 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். 9 நாட்கள் நடைபெற உள்ள பலூன் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன.
வழக்கமாக இந்த பலூன் திருவிழாவிற்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள், இம்முறை கொரோனா கட்டுப்பாடுகளால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com