தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் எங்கு உள்ளது? அமெரிக்காவிற்கு சென்றது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளதை அறிந்த துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்pt web
Published on

செய்தியாளர் C. விஜயகுமார்

கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட களமிறங்கினார். ஆனால், பல்வேறு விவகாரங்களில் அவர்மீது எழுந்த விமர்சனங்கள் அவரைப் பின்வாங்க வைத்தது. முடிவில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த நிலையில், கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிவதாக அறிவித்தார். கமலா ஹாரிஸ் பூர்வீகமாக தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கமலா ஹாரிஸின் பூர்வீகம் எது?

கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் ஸ்டெனோகிராபராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று, பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறினார்.

கமலா ஹாரிஸ்
அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்| ட்ரம்பிற்கு இருக்கும் சிக்கல், கமலா ஹாரிஸ்க்கு இருக்கும் பலம் என்ன?

அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்

இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக ஜோபைடனுக்கு ஜனநாயக கட்சி சார்பில் வாய்ப்பு கிடைத்த போதும், அவரது கட்சி தொண்டர்கள் ஜோ பைடனுக்கு வயதாகி விட்டதாக கூறி வேட்பாளரை மாற்ற வேண்டும் என தொடர்ந்து தெரிவித்த நிலையில், ஜோ பைடன் தானாக முன்வந்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ஜனநாயக கட்சி கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

தமிழகத்துடன் நெருக்கமாக இருக்கும் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலா ஹாரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ்
அமெரிக்கா| ஒரேநாளில் ரூ.677 கோடி நிதி திரட்டிய கமலா ஹாரீஸ்.. அடுத்த அதிபர் பெண்தான்.. கணித்த ஜோதிடர்

பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள்

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது என்பது குறித்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அவர் வெற்றி பெற கிராம மக்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கமலா ஹாரிஸ்
“அதிபர் ஜோ பைடனிற்கு நன்றி..” அதிபர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு கமலா ஹாரிஸ் பெருமிதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com