காஸாவில் செயல்படும் அல் ஷிபா மருத்துவமனையில் 10 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அந்த சுரங்கப்பாதை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தும் ஹமாஸ் குழுவினர், மருத்துவமனையை தங்கள் புகலிடமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.