’ஸ்கூபா டைவிங்’கின் போது சுறா கடித்தது: இந்திய வம்சாவளி பெண் பலி!

’ஸ்கூபா டைவிங்’கின் போது சுறா கடித்தது: இந்திய வம்சாவளி பெண் பலி!
’ஸ்கூபா டைவிங்’கின் போது சுறா கடித்தது: இந்திய வம்சாவளி பெண் பலி!
Published on

ஸ்கூபா டைவிங்கின் போது அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், சுறா கடித்து பலியானார்.

இந்திய வம்சாவளி பெண்ணான ரோஹினா பண்டாரி (49), அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவர் 18 பேர் கொண்ட குழுவுடன் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான, கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில், ஸ்கூபா டைவிங் செய்தார்.

அப்போது டைகர் சுறா அவர் கால்களை கடித்து குதறின. இதையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com