கன்டெய்னரில் மனிதர்கள் கடத்தல்: 8 பிணங்களுடன் 38 பேர் மீட்பு

கன்டெய்னரில் மனிதர்கள் கடத்தல்: 8 பிணங்களுடன் 38 பேர் மீட்பு
கன்டெய்னரில் மனிதர்கள் கடத்தல்: 8 பிணங்களுடன் 38 பேர் மீட்பு
Published on

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரத்தில் லாரியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரத்தில், வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் இருந்துள்ளனர்.

கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கன்டெய்னரில் மனிதர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். கன்டெய்னரில் இருந்த 38 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கன்டெய்னரில் அடைத்து அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com