ஹர்வீ புயல் மீட்புப் பணி: செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம்கள்

ஹர்வீ புயல் மீட்புப் பணி: செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம்கள்
ஹர்வீ புயல் மீட்புப் பணி: செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம்கள்
Published on

டெக்சாஸ் வெள்ளத்தில் மீட்கப்படும் மக்கள் அழைத்து வரும் செல்லப்பிராணிகளுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலான மக்கள் தங்களுடன் விலையுயர்ந்த பொருள்களையும் ஆவணங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். கூடவே தங்களது செல்லப் பிராணிகளையும் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றைப் பாதுகாப்பதற்காக நிவாரண முகாம்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. விலங்குகள் மீட்பு குழு என்ற தன்னார்வ அமைப்பு இதற்காகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மழை வெள்ளம் காரணமாக முதலைகள் ஊருக்குள் புகுந்திருக்கின்றன. மிசௌரியில் உள்ள தனது வீட்டுக்குள் வந்த இரு முதலைகளை அரியானா கோன்சலஸ் என்ற பெண் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடீயோவை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டிருக்கிறார். அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து முதலைகள் வந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com