''இலங்கை அரசின் மாபாதக செயல்'' - முள்ளிவாய்க்கால் நினைவிட இடிப்புக்கு முதல்வர் கண்டனம்

''இலங்கை அரசின் மாபாதக செயல்'' - முள்ளிவாய்க்கால் நினைவிட இடிப்புக்கு முதல்வர் கண்டனம்
''இலங்கை அரசின் மாபாதக செயல்'' - முள்ளிவாய்க்கால் நினைவிட இடிப்புக்கு முதல்வர் கண்டனம்
Published on

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இலங்கை அரசால் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com