"டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முடியாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது"- தலிபான் ராணுவத்தளபதி

"டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முடியாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது"- தலிபான் ராணுவத்தளபதி
"டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முடியாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது"- தலிபான் ராணுவத்தளபதி
Published on

கடுமையான சண்டை நடைபெற்று வந்ததால் டேனிஷ் சித்திக்கை ஆப்கான் ராணுவத்தினரால் காப்பாற்ற முடியவில்லை என்று தலிபான் படை தளபதி ஹைபதுல்லா அலிசாய் தெரிவித்துள்ளார்.

புலிட்சர் விருது வென்ற புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், ஆப்கானில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான செய்தி சேகரிப்பின்போது கடந்த மாதம் 16ஆம் தேதி இறந்தார். அவர் இறந்தது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்தன. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையொன்று டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் துடிதுடித்து கொன்றதாக கூறியது.

இந்நிலையில் தலிபான் தளபதி ஹைபதுல்லா அலிசாய் விளக்கமளித்துள்ளார். அதில் "கந்தஹாரில் ஆப்கான் ராணுவத்துடன் கடுமையான சண்டை நடந்துக்கொண்டிருந்தது. அப்போது புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முடியாமல் ஆப்கன் ராணுவம் அப்படியே விட்டுவிட்டது. மேலும் ஆப்கான் ராணுவம் பின்வாங்கியபோது, அதிலிருக்கும் ஓர் வாகனத்தில் டேனிஷ் சித்திக் சென்றுவிட்டார் என ஆப்கான் ராணுவத்தினர் நினைத்தனர்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com