காங்கோ நாட்டில் பணியாற்றிய உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எபோலோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் காங்கோ நாட்டில் பணியமர்த்தப்பட்டனர். அந்த ஊழியர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 29 பேர் கர்ப்பமான நிலையில், பலர் கரு கலைப்புச் செய்துள்ளனர். இச்செயலால் உள்ளம் உடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.