ஃபேஸ்புக் நேரலையில் ஹசனுக்கு கொலை மிரட்டல்: வங்கேதச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் நேரலையில் ஹசனுக்கு கொலை மிரட்டல்: வங்கேதச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!
ஃபேஸ்புக் நேரலையில் ஹசனுக்கு கொலை மிரட்டல்: வங்கேதச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!
Published on

வங்கதேச கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹனுக்கு ஃபேஸ்புக் நேரலையில் இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை, மதியம் 12:06 மணியளவில், வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள ஷாப்பூர் பகுதியைச் சேர்ந்த மொஹ்சின் என்ற இளைஞர் தனது ஃபேஸ்புக் நேரலையில் தோன்றி வங்கதேச கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை கடுமையாக விமர்சித்து, "ஷகிப் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியிருக்கிறார். அவரைத் துண்டு துண்டுகளாக வெட்டுவேன். ஷகிப்பைக் கொல்ல சில்ஹெட்டிலிருந்து டாக்காவுக்குச் செல்வேன்" என்று கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்தார் அந்த நபர். இந்த வீடியோ சில மணிநேரங்களில் வைரலாகி போலீஸின் கவனத்துக்குச் சென்றது.

கூடவே, ஷகிப் அல் ஹசனுக்கும் இந்த விஷயம் தெரியவர, விவகாரம் பெரிதானது. எதற்காக அந்த இளைஞர்கள் இப்படி மிரட்டுகிறார் என்ற விசாரணையில் சில தகவல்கள் வெளிவந்தன. நவம்பர் 12, வியாழக்கிழமை, ஷகிப், பெலேகாட்டா பகுதியில் காளி பூஜையை துவக்கிவைக்க கொல்கத்தா சென்றதாக கூறப்படுகிறது. மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகவே இஸ்லாமியர்கள் மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த இளைஞர் இப்படி மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, நேற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷகிப், வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்தார். அதில், "மதத்தைச் சுற்றி பேச்சுக்களோ செயல்களோ இல்லாத சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேனே தவிர காளி பூஜையை துவக்க போகவில்லை. எனினும், நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறவிருந்தபோது, காளி பூஜையில் மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் ஒரு 'பெருமைமிக்க இஸ்லாமியர்' " என்று விளக்கம் கொடுத்தார்.

இதற்கிடையே, போலீஸிடம் இந்த வழக்கு செல்ல, "நாங்கள் இந்த விஷயத்தை அறிந்தோம். வீடியோ இணைப்பு சைபர் தடயவியல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது ஓர் அவதூறு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை அழிக்கும் முயற்சி" என்று கூறி வழக்கு பதிந்துள்ளனர்.

ஆனால், சில மணி நேரங்களில் மீண்டும் நேரலைக்கு வந்த இளைஞர் மொஹ்சின் தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார். மேலும், ஷாகிப்பும் மற்ற பிரபலங்களைப் 'சரியான பாதை'யைப் பின்பற்றும்படி அறிவுறுத்துகிறேன் என்றார். இந்த விவகாரம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com