துபாய் ஏர்போர்ட் அருகே விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு

துபாய் ஏர்போர்ட் அருகே விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
துபாய் ஏர்போர்ட் அருகே விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
Published on

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே நடந்த சிறிய ரக விமான விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐரோப்பாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அதில் நான்கு பேர் மட்டுமே அமர முடியும். பிரிட்டீஷை சேர்ந்த 3 பேர் மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் அந்த விமானத்தில் இருந்தனர். 

(இதுபோன்ற விமானம்தான் விபத்துக்குள்ளானது)

விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 3 மைல் தொலைவில்  வந்தபோது, திடீர் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணாமாக துபாய் விமான நிலையம் உள்ளூர் நேரப்படி 7.36 மணியில் இருந்து 8.22 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது. துபாய் வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com