இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு
Published on

இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஜாவாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே நேற்றிரவு நடைபெற்ற போட்டிக்கு பிறகு வன்முறை வெடித்தது. அந்த மோதலில் இரு அணிகளின் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து கடும் மோதலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். எனினும் வன்முறை தீவிரமானதில் மைதானத்திற்குள்ளேயே இரண்டு காவல்துறையினர் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 93 உயிரிழந்தனர். மேலும் இரு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்டதில் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com