சிவகங்கை: வாயில் கவ்வியிருந்த மீன் தொண்டைக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: வாயில் கவ்வியிருந்த மீன் தொண்டைக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
சிவகங்கை: வாயில் கவ்வியிருந்த மீன் தொண்டைக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
Published on

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் தொண்டைக்குள் மீன் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கண்மாயில் பிடித்த மீனை வாயில் கவ்வியிருந்தபோது இந்த சோகம் நேரிட்டுள்ளது.

மாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, குன்றக்குடி கண்மாயில் மீன்பிடிக்க சென்றிருந்தார். அப்போது பிடித்த மீனை வாயில் கவ்விக்கொண்டு, மற்றொரு மீனை பிடிக்க முயன்றபோது அந்த மீன் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய இளையராஜாவை, அருகில் இருந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மூச்சுத்திணறலால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com