வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலோடு ஒப்பிட்டு பேசிய சீமான், தேர்தல் ஆணையமே ஒரு நாடகக்குழு என்றும் விமர்சித்தார். 'பொத்தானை அழுத்தினால் உடனடியாக எண்ணி சொல்லிவிடும். இதற்கு ஏன் 25 நாட்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓரிடத்தில் அடைத்து வைக்க வேண்டும்? டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ண 25 நாட்கள் எதற்கு?' என்றும் கேள்வியெழுப்பினார் சீமான்.