கமல்ஹாசனை விட ஹெலிகாப்டரை பார்க்க அதிக அளவில் குவிந்த மக்கள்!

கமல்ஹாசனை விட ஹெலிகாப்டரை பார்க்க அதிக அளவில் குவிந்த மக்கள்!
கமல்ஹாசனை விட ஹெலிகாப்டரை பார்க்க அதிக அளவில் குவிந்த மக்கள்!
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வந்த ஹெலிகாப்டரைக் காண திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

மடத்துக்குளம் பகுதியில் பரப்புரை மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்காக புதன்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

கமல்ஹாசன் பரப்புரைக்குச் சென்றுவிட, அவர் வந்த ஹெலிகாப்டரின் அருகில் நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, உடுமலைப்பேட்டைக்கு பரப்புரைக்குச் சென்ற கமல்ஹாசன், மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், அங்கிருந்து திரும்பி ஹெலிகாப்டரில் பறந்தார். இதனால், கமலைப் பார்க்க வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com