நுங்கம்பாக்கத்தில் மழையால் சாலையில் விழுந்த புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மிகப்பெரிய புளியமரம் ஒன்று சாலையில் விழுந்தது. சென்னை முழுவதும் நள்ளிரவில் பலத்த மழை பெய்த நிலையில் நுங்கம்பாக்கம் ஹாடோவ்ஸ் சாலையில் அதிகாலையில் மரம் ஒன்று சாலையில் சாய்ந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்துவந்த மாநகராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.