செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பேசிய திருச்சி சிவா, “தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும். செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கு தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தனியார் பங்குதாரரை தமிழ்நாடு அரசே அடையாளம் காணும். தனியார் உதவியுடன் செங்கல்பட்டில் விரைந்து தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். மத்திய அரசு நிதி முதலீடுகளை திரும்பப் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்” என தெரிவித்தார்