வெற்றி பெறும் வரை ஓய்வும் உறக்கமும் கிடையாது: டிடிவி தினகரன் உறுதி

வெற்றி பெறும் வரை ஓய்வும் உறக்கமும் கிடையாது: டிடிவி தினகரன் உறுதி
வெற்றி பெறும் வரை ஓய்வும் உறக்கமும் கிடையாது: டிடிவி தினகரன் உறுதி
Published on

நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் வரை ஓய்வு உறக்கம் கிடையாது என அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டிடிவி தினகரன் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நல்ல நோக்கத்தில் பயணத்தை தொடங்கி இருக்கிறோம். நேற்று நடைபெற்ற மேலூர் கூட்டம் என்பது தொடக்கம் தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி அடைந்த பின்புதான் எங்களுக்கு ஓய்வும்.. உறக்கமும்" என்றார்.

முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக ‌அம்மா அணி சார்பில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன், ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர். அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்திருந்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com