அன்று ஆசையை நிறைவேற்றிய சூர்யா... தசைச் சிதைவு நோய் சிறுவன் இன்று இல்லை...!

அன்று ஆசையை நிறைவேற்றிய சூர்யா... தசைச் சிதைவு நோய் சிறுவன் இன்று இல்லை...!
அன்று ஆசையை நிறைவேற்றிய சூர்யா... தசைச் சிதைவு நோய் சிறுவன் இன்று இல்லை...!
Published on

தேனி அருகேயுள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த மல்லிகா - ராமர் தம்பதியின் மகனான தினேஷ்குமார், தசைச் சிதைவு நோயினால் பாதிக்கபட்ட நிலையிலும், மனம் தளராமல் தனக்கு பிடித்த ஓவியங்களை வரைந்து வந்தார். தனது வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகர் சூர்யாவை பார்க்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என சிறுவன் தினேஷ்குமார் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த செய்தி தொகுப்பு புதிய தலைமுறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியானதை அடுத்து நடிகர் சூர்யா, தினேஷ்குமாரின் ஆசையினை நிறைவேற்றும் விதமாக குடும்பத்துடன் தனது வீட்டிற்கு அழைத்து தினேஷ்குமாருடன் ஒருநாள் முழுவதும் செலவிட்டு அவரை மகிழ்வித்தார். தினேஷ்குமாரின் நிலையை அறிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது சொந்த பணத்தில் 2 லட்சம் ரூபாய் கொடுத்து சிகிச்சைக்கு உதவி செய்தார்.

இந்நிலையில் தினேஷ்குமாரின் உடல்நிலை மோசமானதை அடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட அவர், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தினேஷ்குமாரின் மறைவு காட்டுநாயக்கன்பட்டி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com