கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம்: தீக்குளிக்க முயன்ற தொண்டர்!

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம்: தீக்குளிக்க முயன்ற தொண்டர்!
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம்: தீக்குளிக்க முயன்ற தொண்டர்!
Published on

கள்ளக்குறிச்சி தனி தொகுதி வேட்பாளர் செந்தில்குமாரை மாற்றக் கோரி அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் குமாரை மாற்றக் கோரியும் அழகுவேல் பாபுவை வேட்பாளராக அறிவிக்க கோரியும் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அதிமுகவினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக அதிமுக தொண்டர் ஒருவர் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காப்பாற்றினார்கள்.  இதனால் கள்ளக்குறிச்சி தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com