கொடைக்கானலில் முழு கொள்ளளவை எட்டிய நட்சத்திர ஏரி... கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

கொடைக்கானலில் முழு கொள்ளளவை எட்டிய நட்சத்திர ஏரி... கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
கொடைக்கானலில் முழு கொள்ளளவை எட்டிய நட்சத்திர ஏரி...  கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
Published on

கொடைக்கானல் நட்சத்திர ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், ஏரியில் தேங்காமல், முழுவதுமாக வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.


இதனால் கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் நகர், வண்ணான் துறை, குறிஞ்சி நகர் மற்றும் பேத்துப்பாறை, அஞ்சுவீடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள நஞ்சை நிலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதனை கவனத்தில் கொண்டு, ஏரியின் நீர் மட்டத்தை 3 அடி வரை குறைக்க விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com