மோடி ஆட்சி அல்ல, மோசடி ஆட்சி : ஸ்டாலின் விமர்சனம்

மோடி ஆட்சி அல்ல, மோசடி ஆட்சி : ஸ்டாலின் விமர்சனம்
மோடி ஆட்சி அல்ல, மோசடி ஆட்சி : ஸ்டாலின் விமர்சனம்
Published on

மத்தியில் மோடி ஆட்சி என்ற பெயரில், மோசடி ஆட்சி நடைபெறுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் விழாவின் போது பேசிய ஸ்டாலின், அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார். அத்துடன் தற்போது மத்தியில் இருப்பது மோடி ஆட்சி அல்ல என்றும், அது மோசடி ஆட்சி என்றும் அவர் விமர்சித்தார். முன்னதாக விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com