வாகன சோதனையில் சிக்கிய நபர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது அம்பலம்

வாகன சோதனையில் சிக்கிய நபர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது அம்பலம்
வாகன சோதனையில் சிக்கிய நபர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது அம்பலம்
Published on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல மாதங்களாக இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டு வந்த மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிற்றரசன் என்பவரை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.


செஞ்சி காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் சுப்பிரமணியன், சையத் முகமது அலி, சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவலர்கள், விநாயகபுரம் கூட்டு சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சிற்றரசன் (25) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.


அப்போது அவரை பிடித்த போலீசார், அவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தை பற்றி விசாரித்த போது சரியான ஆவணங்கள் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். அவரை செஞ்சி போலீசார் மேலும் விசாரித்ததில் செஞ்சி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளதா கூறினார்.


தற்போது அவரிடம் அவர் ஓட்டி வந்த வாகனம் ஒன்றும் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் இருந்துள்ளது. அந்த 3 இருசக்கர வாகனங்களையும்; பறிமுதல் செய்த செஞ்சி காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com