10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு

10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு
10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு
Published on

பொதுப் பிரிவில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவும், அதிமுகவும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் பேசுகையில், “பொருளாதார அடிப்படையிலான இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. எந்தவொரு ஆவணமும் கணக்கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது. 10 சதவிகித பொது இட ஒதுக்கீடு நிலையானதாக இருக்காது. சாதி ரீதியிலான பின் தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அடிப்படையில் இல்லாமல், தனிநபர்களுக்கு இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும். 

இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தமிழக மக்கள் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள். இடஒதுக்கீடு முறை எப்படி தமிழகத்தில் இயங்கி வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையை அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது” என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக, 10 சதவிகித மசோதாவுக்கு எதிராகா மக்களவையில் நேற்று அதிமுக எம்.பி கடுமையாக பேசினார். பிரதமர் மோடி உறுதியளித்தபடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே இருக்க மாட்டார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அவர் கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com