மோடி வருகையையொட்டி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது

மோடி வருகையையொட்டி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது
மோடி வருகையையொட்டி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது
Published on

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கிவைக்க உள்ளார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ‌ படையினர் மற்றும் அதிரடி படையினரும் ஆகியோரும் ஈடுபட உள்ளனர்.

மேலும் விமான நிலையம் முதல் ஐஐடி, அடையார் புற்றுநோய் மையம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற‌ன. ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல், வர்த்தக பிரிவு தலைவர் ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com