கட்சியில் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

கட்சியில் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்
கட்சியில் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

கட்சியில் மட்டும் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி தாருங்கள் என தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார்.

திமுகவை பலப்படுத்தும் வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். அதன்படி 17-வது நாளாக தேனி, திருநெல்வேலி, மத்திய சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.

அப்போது, தேனி மாவட்டத்தில் ஸ்டார் அந்தஸ்துள்ள வேட்பாளர்களை  நிறுத்த வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பதாகவும் நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், புகார்களை விசாரிக்கும் குழுவினர் மாவட்டந்தோறும் வந்து விசாரிப்பார்கள் என உறுதி அளித்தார். மேலும் வளர்ச்சிக்காக கட்சியில் மட்டும் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுங்கள் என தொண்டர்களிடம் ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com