தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முதல்வருடன் சந்திப்பு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முதல்வருடன் சந்திப்பு
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முதல்வருடன் சந்திப்பு
Published on

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார். 

தமிழக தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய ஆர்.முத்துக்குமாரசாமி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயண், அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார்.

மத்திய அரசின் தற்போதைய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உறவினரான இவருக்கு 2004ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் ஆஜரானவர். தற்போது, மெட்ராஸ் பார் அசோசியேசனின் தலைவராக இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com