மயிலாடுதுறை: ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 4 கிலோ பழைய வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

மயிலாடுதுறை: ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 4 கிலோ பழைய வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
மயிலாடுதுறை: ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 4 கிலோ பழைய வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
Published on

சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரயில்வே ரோட்டை சேர்ந்த பாக்சந்த் என்பவரின் மகன் அபிஷேக் 30. இவர் சீர்காழி பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது காரில் 4 கிலோ எடையுள்ள பழைய வெள்ளி கொலுசுகள் மோதிரங்கள் உள்ளிட்ட பொருட்களை பாலிஷ் செய்வதற்காக ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார்.


இதையடுத்து சீர்காழி - சிதம்பரம் புறவழிச்சாலையில் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்தபோது வெள்ளி நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான ஹரிதரனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com