கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் வருமானத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.