”திமுகவை யாரும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது” - அண்ணாமலைக்கு கனிமொழி கண்டனம்

”திமுகவை யாரும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது” - அண்ணாமலைக்கு கனிமொழி கண்டனம்

”திமுகவை யாரும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது” - அண்ணாமலைக்கு கனிமொழி கண்டனம்
Published on

திமுகவை யாரும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது என பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை ஐபிஎஸ் பரப்புரையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.

இன்று தேனி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி எம்.பி அண்ணாமலையின் பேச்சுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது, ‘’திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

திமுகவை யாரும் மிரட்டவும் முடியாது, அச்சுறுத்தவும் முடியாது; திமுக எழுந்தால் யாரும் தாங்கமுடியாது; உங்களின் மிரட்டலை நிறுத்திக்கொள்ளவேண்டும்’’ என கண்டித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com