துப்பாக்கியால் வெல்ல நினைப்பது மோசமான வழி: கமல்ஹாசன் கண்டனம்

துப்பாக்கியால் வெல்ல நினைப்பது மோசமான வழி: கமல்ஹாசன் கண்டனம்
துப்பாக்கியால் வெல்ல நினைப்பது மோசமான வழி: கமல்ஹாசன் கண்டனம்
Published on

எதிர்க்கருத்துக் கூறுவோரின் குரலை துப்பாக்கியைக் கொண்டு ஒடுக்கி வெற்றி பெற நினைப்பது மிக மோசமான வழியாகும் என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கமல், அவரது இழப்பால் வாடும் அனைவருக்கும் தனது இரங்கலையும் தெரி‌வித்துக்கொண்டுள்ளார்.

இந்துத்துவா அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலைக்கு ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்லட்டட கௌரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com