'சகோதரனிடம் அவுட் ஆனதால் குடும்பத்துக்கு மகிழ்ச்சியே' - ஹர்திக் பாண்டியா

'சகோதரனிடம் அவுட் ஆனதால் குடும்பத்துக்கு மகிழ்ச்சியே' - ஹர்திக் பாண்டியா
'சகோதரனிடம் அவுட் ஆனதால் குடும்பத்துக்கு மகிழ்ச்சியே' - ஹர்திக் பாண்டியா
Published on

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சகோதரன் க்ருனால் பாண்டியாவிடம் அவுட் ஆனதால் துவண்டுபோகவில்லை எனவும் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனின் புதுவரவுகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. முதன்முதலாக கேப்டன் பதவியை ஏற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார் ஹர்திக் பாண்டியா. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். வெற்றிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா “வெற்றியோடு சீசனை சிறப்பாக துவங்கியுள்ளோம். அணியில் உள்ள அனைவரும் வெற்றிக்கு பங்களித்தனர். அவர்களின் ஈடுபாடு அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு முன்னேறும்போது நம்பிக்கையை அதிகரிக்கும்” என்று கூறினார்.

ஹர்திக் சுட்டிக்காட்டியது போல், முகமது ஷமி, ராகுல் தெவாடியா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்புடன் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் இருந்தனர். ஹர்திக் கேப்டனாக தனது முதல் போட்டியில் தனது வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இருப்பினும், அவர் 11வது ஓவரில் தனது சகோதரர் க்ருனாலிடம் அவுட் ஆனார்.ஹர்திக் 28 ரன்களில் இருந்து 33 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து பேசிய ஹர்திக் “நாங்கள் தோற்றிருந்தால் க்ருனாலிடம் அவுட்டானது என்னை மேலும் துவண்டுபோக செய்திருக்கும். ஆனால் இப்போது குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் என்னை அவுட்டாக்கி வெளியேற்றினார், நாங்கள் போட்டியில் வென்றோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com