எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும்- ஜெயக்குமார்

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும்- ஜெயக்குமார்
எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும்- ஜெயக்குமார்
Published on

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய கொடியை அவமதித்ததாகவும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் விளைப்பதாகவும் கூறி எஸ்.வி.சேகரின் மீது நேற்று சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும் எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனாவுக்கான மருந்தை ரஷ்யா கண்டறிந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com